உள்ளிருக்கும் ஒரு சுகம் . . .
தனியாய் செல்லும் போதும்,
தன்னை அறியாமல் பேசவைக்கும் . . .
விழிகளில் விளையாடி,
இதயத்தை வருடும் . . .
தன்னையே அர்ப்பணித்து,
அன்பையே எதிர்பார்க்கும் . . .
இன்னும் என்ன சொல்ல ?
உணர்வுகளை முழுமையாய் சொல்ல
இன்னும் எந்த மொழியிலும்
எழுத்து வடிவம் இல்லை,
காதலில்
உன்னதமான உணர்வுகளைத் தவிர
வேறு எதற்கும் இடம் இல்லை !
1 கருத்து:
கவிதை அருமை. வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக