வெள்ளி, 25 செப்டம்பர், 2009

காதல்

உறக்கம் இல்லா இரவிலும்,
உள்ளிருக்கும் ஒரு சுகம் . . .

தனியாய் செல்லும் போதும்,
தன்னை அறியாமல் பேசவைக்கும் . . .

விழிகளில் விளையாடி,
இதயத்தை வருடும் . . .

தன்னையே அர்ப்பணித்து,
அன்பையே எதிர்பார்க்கும் . . .

இன்னும் என்ன சொல்ல ?

உணர்வுகளை முழுமையாய் சொல்ல
இன்னும் எந்த மொழியிலும்
எழுத்து வடிவம் இல்லை,

காதலில்
உன்னதமான உணர்வுகளைத் தவிர
வேறு எதற்கும் இடம் இல்லை !