நம்மால் ஆன வரை நல்லதையே செய்வோம் என்றாய்
உண்மை அன்பை நீ தந்தாய்
உனக்காகவே இருப்பேன் என்று உறுதி சொன்னாய்
வீழும்போது தாங்கி நின்றாய்
வெற்றி பெறவே தோள் கொடுத்தாய்
அழும்போது அரவணைத்தாய்
அன்பு காட்டினால் அகம் மகிழ்ந்தாய்
கோபம் வரும்போது சாந்தம் செய்தாய்
சோம்பல் கொண்டால் சாதனைத் தீ ஏற்றினாய்
தனிமைத் துயர் துடைத்து நின்றாய்
தன்னலம் கருதாமல் உதவிகள் புரிந்தாய்
உரிமை கொண்டு அறிவுரை சொன்னாய்
உள்ளம் உயரவும் வழிகாட்டினாய்
நட்பே நீ என்னுள் நிறைந்தாய்,
நான் உன்னுள் துளிர்த்தேன் !
நட்பெனும் ஆன்ம உணர்வை பகிர்ந்து கொள்ளும் இனிய இதயங்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக