வெள்ளி, 7 நவம்பர், 2008

வேலையும் வாழ்க்கையும்

எப்.எம். சிணுங்கல்கள் தாலாட்டும் இல்லை
பஸ்ஸின் குலுங்கல்கள் தொட்டிலும் இல்லை
ஆனாலும் உறங்கிப் போகின்றேன்,
சொந்தங்களையும்
நட்பின் பந்தங்களையும்
பிரிந்த இதயம்
சோர்ந்து போவதால் . . .

அம்மாவிடம் கொஞ்சி கொஞ்சி,
அப்பாவிடம் கெஞ்சி கெஞ்சி,
வாங்கிய 100 ரூபாயைவிட - 1ஆம் தேதி
தவறாமல் வரும்
10000 ரூபாய்க்கும் கூடுதலான சம்பளம்
சிறிதாகவே தோன்றுகின்றது !
இயந்திரம் போலாகிவிட்ட வாழ்க்கையால் . . .

2 கருத்துகள்:

R. Kaja Mohideen சொன்னது…

Wow...

Gopi, I don't know that you're such a good poet.

Keep it up and continue your writing...

All the best.

பெயரில்லா சொன்னது…

itz really very nice one.. Gud worrk...keep it up