உன் பிரிவைத் தாங்கவும் தெம்பில்லை !
ஈன்றவனே தன் உரிமை விட்டுக்கொடுக்கும் போது
என் அற்ப மனம் தவிக்கின்றதே !
உன் நட்பெனும் புனித கங்கை
என் நெஞ்சம் தன்னை நனைக்கின்றதே !
உன் அன்பை நினைக்கையில்
என் கண்கள் ஆனந்தத்தில் பனிக்கின்றதே !
நம் நட்பின் நெருக்கம் குறைந்திடுமோவென்று
என் சிந்தை அஞ்சிப் பதறுகின்றதே !
அடுத்த ஜென்மத்திலாவது
என் மகளாய் நீ பிறந்திடு !
என் மனமே அதுவரை பொறுத்திரு !
4 கருத்துகள்:
நல்லா இருக்கு தலைவா
மணிகண்டன்,
உங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி !
கவிதைகள் மிகவும் அருமை... தாங்கள் என்னுடிய கவிதைகளையும் படித்து கருத்து பரிமாறுங்கள். நன்றி.
உங்களைத் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். மறுக்காமல் கலந்துகொள்ளவும்.
நேரமின்மையால் உங்கள் பதிவு குறித்த கருத்துகளை பின்னர் பகிர்கிறேன். நன்றி.!
கருத்துரையிடுக